Monday, August 31, 2009

புதுசு கண்ணா புதுசு

தலைப்ப பார்த்து ஒன்னும் பெரிசா யோசிக்காதீங்க.எல்லாம் ஒரு buildup தான்.அதாவது நான் வலைப்பூக்களுக்கு புதியவன் என்பதைத்தான் அப்பிடி சொன்னேன். என்னஎழுதலாம் என்ன எழுதலாம்ன்னு யோசிச்சா ஒண்ணுமே வரல்ல .( டேய் டேய் மண்டையில இருந்தடானடா வரும்?)

நான் வலைப்பூ ஆரம்பித்து just 1 வாரம்தான் . புதுசா blogs பற்றி படிச்சிக்கிட்டு வாறன் . பாசயிடுவேன்னு நினைக்கிறேன் .எதாவது ஒரு துறையில எழுதினா நல்லதா இல்லாட்டி தமிழ் படம் மாதிரி மசாலாவா இருந்தா நல்லதான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எப்பிடியும் என்கிட்ட இருந்து உருப்படியான பதிவுகள் வர கொஞ்ச நாள் போகும். so எல்லாருக்கும் என்ன சொல்றேன்னா கொஞ்ச நாள் பொறுங்க. எப்பிடியும் ரஜினி அரசியலுக்கு வர முந்தி உருப்படியான பதிவு எழுதலாம்ன்னு நம்பிக்கை இருக்கு.


Friday, August 28, 2009

வலைப்பூ இல்லாமல் வாழ்வது வாழ்வா?

ஒரு கருத்து இருக்கு. "உலகத்துல மாற்றமே இல்லாதது மாற்றம் ஒன்றுதான்".100% சரி.ஏன்னா நான் ஒரு காலத்துலயும் நினைத்துபார்க்கவில்லை இப்பிடி எல்லாம் நடக்கும்னு. எப்பிடி எல்லாம் என்று கேக்கிறீங்களா? அதாங்க இப்பிடி நான் எல்லாம் வலைப்பூ திறந்து எதாவது உளறி கொட்டுவேன் என்று. ஆனா அதைத்தான் தொழில்நுட்ப முன்னேற்றம் என்று சொல்றாங்க.

ஒரு காலம் இருந்துச்சு hand phone வச்சிருந்தா பெருமை. இப்ப சொல்லவே வேணாம் யார் யார் எல்லாம் hand phone யூஸ் பண்றாங்க என்று. அதுக்கு பிறகு இன்டர்நெட் common use க்கு வந்தது. அதுல ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு trend.e-mail,voice mail,chat,voice chat,video chat இப்பிடி என்னென்னவோ, அதுக்கப்புறம் social websites(அதாங்க நம்ம facebook,my space, twitter இத மாதிரி)இப்படி இன்டர்நெட் வளர்ந்துகிட்டே போகுது, ஆனா நாங்கள் இன்னும் மெகா சீரியல்லதான் காலத்த கழிக்கிறோம்.

சரி இவன் என்ன சொல்ல வாரான்னு நீங்க முணுமுணுக்குறது கேக்குது. நான் என்ன சொல்ல வரேன்னா இது வலைப்பூக்களின் காலம்(அதாங்க blogs) இப்ப ஒவ்வொருத்தரும் வலைப்பூ வச்சிருக்குறது ஊருக்கு தேவையா இல்லையான்னு தெரியாது. ஆனா எனக்கு தேவைன்னு நினைக்கிறேன்.ஏன்னா நான் சொல்றத ஊர் கேக்காத போது இங்க வந்து கொட்டினா யாராவது படிச்சிட்டு comment அடிச்சுட்டு போய்கிட்டே இருக்கப்போறான். so காதல் இல்லாம கூட வாழலாம் போல but வலைப்பூ இல்லாம ரொம்ப கஷ்டம்ன்னு நான் நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

Thursday, August 27, 2009

புதிய அனுபவங்கள்

இன்றுதான் நான் முதன் முதலாக வலைப்பூவில் எழுதுகிறேன். ரொம்ப புதுசா இருக்கு. ஆனா எனக்கு விரும்பினத விரும்பின மாதிரி எழுதலாம்ன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ok மீண்டும் சந்திப்போம் .

முதல் இடுகை

அனைவருக்கும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? நிறைய நாளாக வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற ஆசை. இன்றுதான் நிறைவேறியிருக்கிறது.எல்லா புகழும் இறைவனுக்கே. சரி இனிமேல் அடிக்கடி சந்திப்போம்.