மனிதங்கள் மறக்கப்பட்டு
உணர்வுகள் ஊமையாய்ப்போன
யுகங்களில்
நமதான உயிர்வாழ்தல்கள் ....
நரன்களின் நரம்புகள்
புறக்கணிக்கப்பட்டு
இரும்பில் இருதயங்கள்
பொருத்தப்படுகின்றன.
ஜீனோவும்,
இயந்திராவும்,
சிட்டியும்
நம்மை ஆள்கிறார்கள்.
போலி பிரமாண்டங்களில்
நீயும் நானும்
தெரிந்தே ஏமாறுகிறோம்.
காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை.
மிருகமாய் போன
மனிதன் இன்று
எந்திரனாகிறான்.
மனிதன் இன்னும்
மனிதம் காணவில்லை.
கேட்டால் நீ
சொல்வாய்
"அடேய்! இது எந்திரன் நேரம் "
(எங்கள் தேசம் 2010 நவம்பர் 15-30 இதழ்)



