
சபர் மாதத்து
இறுதிபிறைகளில்
நான் வியந்து போகின்றேன்
ஏன் நீயும்தான்.........
யார் கண்பட்டதோ தெரியவில்லை
உன் முன் வளர்ந்த குழந்தைகள்
உனக்கே சவால் விடுகின்றன...
'பொடிப்பயல்கள்'
நீ தந்த காய்ந்த ரொட்டிகளை
தின்று விட்டு
உனக்கே ஏசுகிறார்கள்
'துரோகிகள்'
பிர்அவனின் எச்ச சொச்சங்களை
நீ காண்பித்தாய்......
உன்னை பார்த்து
என் பாட்டி சொன்னாள்
"கமால் அப்துல் நாசர் இன்னும் இறக்கவில்லை "
என்று...
படைவீரனான எனக்கு
உன் கட்டளைகள் கேட்கவில்லை
தஹ்ரீர் சதுக்கத்து
கூக்குரல்களில்
அவை அடங்கிபோகின்றன.
நன்றி கெட்டவனில்லை நான்
கடைசியாய் உனக்கோர் ஆலோசனை
ஹிஜ்ரத் செய்துவிடு மிஸ்ர் தேசத்தை
ஏனெனில் நாளை முதல்
தஹ்ரீர் சதுக்கத்து கற்களுடன்
சிறைச்சாலை கம்பிகளுடன்
பிரமிட் தேசத்து மணல்களுடன்
சேர்ந்து நானும் கூவுகிறேன்
உன்னை பார்த்து
"ஈத் முபாரக்" என்று ...
(எங்கள் தேசம் 2011 மார்ச் 1-15 இதழ்)
No comments:
Post a Comment