
இரவுகளின் இம்சை
இன்னும் முடிந்தபாடில்லை
நிலவின் நிசப்தமும்,
விழிகளின் ஞாபகிப்பும்
சாத்தானை நண்பனாக்கி....
அருளை தூரமாக்கி....
விஷம் பரப்புகிறது
மனதில் ......
மறை தந்த மாதமடா......!
கூவுகிறது ஆன்மா....!
மனதின் மறுபக்கம்
இருள் தேடுகிறது
ஒளியில்...
சாவகங்கள் எல்லாம்
சாகின்றன........
ஞாபகங்களின் கறைகளினால்.....
நிலவும் நினைவும்
ஒத்தகருத்தாய்
என் அகராதியில்
கறை அவற்றின்
கல்லெழுத்தாய்
(சாவகம் -நோன்பு )
No comments:
Post a Comment