Friday, November 23, 2012

முரண்களின் ரசிகன்

 


                                                                                                                                                கரையோர நிலவொளி
காண ஆசை....!
கடல் இல்லை
எங்கள் ஊரில்...!

மழைத்துளிகளுக்காய் 
காத்திருகிறேன்....!
வெடித்துப்போன வரண்ட நிலத்தில்
படுத்தபடி...!
மலையோர தென்றல்
சுகம்தான்.....
மழை தேடுகிறேன்
நிறைய நாளாய்.....

மறுப்புகளின் வார்த்தை தாங்கும்
இதயம் இது...
முரண்களின் ரசிகன்
நான்.......!
உன் கோபக்கனல்கள்
இந்த சமுத்திரத்தை
ஒன்றும் செய்துவிடாது......

அதனால்தான் சொல்கிறேன்
என் கண்ணிலிருந்து
விழும் சொட்டுகண்ணீருக்கும்
உனக்கும்
சம்பந்தமில்லை......
 

(NEWS VIEW ஆகஸ்ட் 2011 இதழ்)

No comments:

Post a Comment