தூங்கிப்போன முஸ்அப்களும் விழித்திருக்கும் மதீனாக்களும்
முஸ்அப் தெரியுமா உனக்கு.....?
கஸ்ரஜ்களும்படித்திருக்கிறாயா நீ......?
மதீனா......
அதன் அழகு
தெரியுமா உனக்கு......அதன் ஆன்மா
அறிந்திருக்கிறாயா நீ.....?
களத்தில் கால் கடுக்க
நடக்கும் நீ
காலை வேளைகளில்
தூங்கிப்போகிறாய்......
வாய் வலிக்க குர்ஆன் பேசும்
உன் நாக்குகள்சுவைப்பதில்லை
அதன் ருசிகளைஎப்போதும்......
அழைப்பின் நிலம்
வாசிக்கும்
உன் கண்கள்
ஆபாசங்களை
வெறுப்பதில்லை.....
தூய தேசம்
யாசிக்கும்
உன் சிந்தனையில்
ஆங்காங்கே ஜாஹிலிய்யத்
ஒட்டிகொண்டிருக்கிறது........ நீ கூறுவது போல்
மாற்றம் வேண்டும்முதலில்
என்னிடம்.........பிறகு
உன்னிடம்......
ஆயிரமாயிரம்
மதீனாக்கள்
விழித்திருக்கின்றனஅவ்ஸ்களும்
கஸ்ரஜ்களும்
காத்திருகின்றார்கள்
அவர்களுக்கு வேண்டும்ஒரு
முஸ்அப் இப்னு உமைர்......
எழுந்து நிற்போம்நீயும் நானும்
முஸ்அப்பாய்
மீண்டும்
ஒரு மதீனா அல்ல......
பல மதீனாக்கள்......இன்ஷா அல்லாஹ்
(அல்ஹஸனாத் மே 2012 இதழ் )
No comments:
Post a Comment